கடலூர், டிச. 11: கடலூர் இம்பீரியல் சாலையில் ஆலன் சோலி ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. ஐயப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கி ஷோரூம் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சுதன் பவர் டெக் பூங்குன்றன், சுதன் பூங்குன்றன், பிரகாஷ்மல் சோரடியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திக் பழனிச்சாமி வரவேற்றார். ஷோரூமில் பிரத்யேகமான ஆடை ரகங்கள், புதிய டிசைன்கள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு 1999 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால், 1000 ரூபாய் சலுகை விலையில் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நல்லாதரவு வழங்க வேண்டும் என ஷோரூம் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், கோஸ்டல் சிட்டி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் கருணாகரன், பொருளாளர் சிவகுருநாதன், சன் பிரைட் பிரகாஷ், பொறியாளர் சுரேஷ், தினேஷ், சென்ட்ரல் கிளப் ஞானசேகரன், வீரமணி, ஆலன் சோலி பிரம்மேந்திரா, ராமநாராயணன், அரவிந்த், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலன் சோலி சுரேஷ் நன்றி கூறினார்.